News
FEBRUARY 2025

குரு உபதேசம் 4316
முருகப்பெருமானை பூஜித்து ஆசி பெற்றிட்டால் :
புண்ணிய பலம் பெருகுவதற்கும், அருள் பலம் பெருகுவதற்கும் வழிவகைகளை செய்வான் முருகப்பெருமான் என்பதையும் அறியலாம். முருகனருள் கூடின் புண்ணிய பலமும், அருள் பலமும் தாமே பெறலாம் என்பதையும் அறியலாம். முருகனது அருளைப் பெற விரும்பினால் உயிர்க்கொலை தவிர்த்து, புலால் மறுத்து, சுத்த சைவ உணவை மேற்கொள்ள வேண்டும். தினம் தினம் தவறாமல் காலை 10 நிமிடமும், மாலை 10 நிமிடமும், இரவு 10 நிமிடமும் “ஓம் முருகப்பெருமான் திருவடிகள் போற்றி” என்றோ “ஓம் முருகா” என்றோ “ஓம் சரவணஜோதியே நமோ நம” என்றோ “ஓம் சரவண பவ” என்றோ முருகன் திருவடிகளை பற்றி மனம் உருகி பூஜைகள் செய்தும், மாதம் ஒருவருக்கேனும் பசித்த ஏழைகளுக்கு பசியாற்றுவித்தும் ஜீவதயவை பெருக்கி வரவர, முருகன் அருளைப் பெறலாம் என்பதையும் இதுவே புண்ணிய பலத்தையும், அருள் பலத்தையும் பெறுகின்றதான அற்புத உபாயம் என்பதையும் அறியலாம்.