News
DECEMBER 2024
குரு உபதேசம் 4256
முருகப்பெருமான் திருவடியை பூஜித்து ஆசி பெற்றிட்டால் : முதல் மொழியாம், தன்னிகரற்ற மூத்த மொழியாம், ஞானமளிக்கும் மொழியாம், தத்துவார்த்த மொழியாம், தன்னை காப்பாற்றிக் கொள்ள வல்லதும், தன்னை கற்போரையும் காப்பாற்றும் வல்லமை மிக்கதுமான உயிர் மொழியாம் ஞானத்தலைவன், தவத்தால் தோன்றிய தனி மொழியாம் தமிழைக் கற்க கற்க, தலைவன் முருகன் ஆசியைப் பெறலாம் என்பதையும், தமிழைக் கற்பவர் இக வாழ்வாகிய இல்லற வாழ்விற்கு தேவையான பொருளாதாரத்தையும், வேலை வாய்ப்பையும் இனிவரும் ஞானசித்தர் காலமதனிலே உறுதியாக பெறலாம் என்பதையும், இகவாழ்வை தருகின்ற தமிழே ஞானமாய் மாறி ஞானமளித்து பரவாழ்வையும் தரும் என்கிற பேருண்மையையும் அறிவதோடு ஞானம் பெற வேண்டுமாயின் அது எவராயினும் சரி, தமிழைக் கற்றால்தான் ஞானத்துறைக்கே வர முடியும் என்பதையும் அறியலாம். இனி வரும் காலமெல்லாம் தமிழே உலகை ஆட்சி செய்யும். ஆதலினாலே ஞானயுகமாம் தமிழ் யுகத்தினிலே தமிழே தலைமை மொழியாய் விளங்கி நிற்குமாதலால் தமிழை கற்றோரும், கற்போரும், கற்கின்றோரும் அடையும் பெரும் பேற்றை என்னவென்று சொல்வது. தமிழைக் கற்றோர் தகைமை பெறுவார் என்பதையும் முருகப்பெருமானார் ஆசியால் உணர்ந்து வேத மொழியாம் தமிழ் ஞானமளிக்கும் மொழி என்பதையும் உணரலாம். முருகப்பெருமான்தான் தமிழ் கடவுள் என்பதையும் அவனே ஞானத்திற்கும் தலைவன் என்பதையும் அறியலாம்.
தவமுனிவன் முருகனின் தாள்பற்றும் மக்களுக்கு
பவபிணியும் இல்லையே பார்.
கார்மயில் வாகனன் கந்தனைப் போற்றிட
பார்போற்ற வாழ்வார் பண்பே.
காலனை வென்ற கந்தனைப் போற்றிட
ஞாலத்தை வெல்ல நியாயம் கிட்டுமே.