குரு உபதேசம் – 4134
முருகா என்றால், முதன்மைத் தலைவன் முருகன் என்பதை அறிந்தும், அவரது ஆசியினால்தான் நவகோடி சித்தர்களும் உருவாகியுள்ளனர் என்பதையும் அறியலாம். எனவே அகத்தீசா என்றாலும், அருணகிரிநாதா என்றாலும் பதஞ்சலிமுனிவா என்றாலும், பட்டினத்தடிகள் என்றாலும், நந்தீசா என்றாலும், நந்தனார் என்றாலும் நவகோடி சித்தர்களுள் யாரை அழைத்தாலும், அழைப்பது யாரை அழைத்தாலும் அந்த அழைப்புகள் அனைத்தும் முருகனது திருவடிகளையே சென்றடையும். “ஓம் சரவண ஜோதியே நமோ நம” என்று சொல்லுங்கள். நவகோடி சித்தரிஷி கணங்களின் ஆசியை பெறுங்கள்.