Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

குரு உபதேசம் 4333

முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால் : சாதி, மத, இன, மொழி, தேச பாகுபாடற்ற சமதர்ம சிந்தையும், ஜீவதயவும், தயைசிந்தை உடையோராயும் உள்ளவர்கள்தான் முருகப்பெருமானாரால் ஆட்சி பொறுப்பிற்கு தேர்ந்தெடுக்க படுவாரென்றும் அத்தகைய பண்புகளை பெற, முருகனது திருவடிகளைத் தொடர்ந்து மனம் உருகி பூஜித்தாலன்றி பெறுதலரிது என்பதையும், அறிந்து முருகனது அருளைப் பெற்றாலன்றி அணுவும் அசையாது என்பதையும் உணர்ந்து எண்ணம், சொல், சிந்தை, செயல் அனைத்தும் முருகப்பெருமான் சார்ந்து வழி நடத்தினாலன்றி சிறப்பான வகையில் செயல்படமுடியாது என்பதையும் … Read more

குரு உபதேசம் 4281

முருகப்பெருமானை பூஜித்து ஆசி பெற்றிட்டால் : இந்த தேகமே அசுத்தமான கலவையால் உண்டாகியிருப்பதினாலே இந்த அசுத்தமான தேகத்தில் உண்டாகும் சிந்தையும் மாசுபட்டிருப்பதை அறியலாம். இந்த அசுத்த கலவையின் மாசினால் எல்லாம் அறிந்தது போல் உணர்வும், உண்மைப் பொருளை அறியாமலேயே அறிந்தது போல ஒரு பலகீனமும் இருக்கும். யாரேனும் உண்மைப் பொருள் அறிந்த மெய்ஞ்ஞானிகள் சொன்னாலும் அதை ஏற்றுக்கொள்கின்ற பக்குவம் இருக்காது. எனினும் இவ்வித பலகீனங்களிலிருந்து நீங்கி மெய்ஞ்ஞானிகள் கருத்தை ஏற்கின்ற பக்குவம் பெற விரும்புகின்றோர் மாசற்றவனும், ஆயிரம் … Read more

குரு உபதேசம் 4280

முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால் : காமதேகத்தால் வருகின்ற கொடுமையை உணரச்செய்து காமதேகத்தை நீர்த்திட செய்து ஒளி உடம்பை பெறுவதோடு உயர்ந்த சிந்தனை, உயர்ந்த சொல், உயர்ந்த செயல் என்பவை உண்டாகும் என்பதை அறியலாம். மாதவ முருகனின் மலரடி போற்றிட ஆதவன் போலவே அறிவு மிளிருமே.

குரு உபதேசம் 4279

முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால் : சரியை, கிரியை, யோகம், ஞானம் என்பதான அறம், பொருள், இன்பம், வீடு பேறாகிய நான்கையும் அறியச் செய்தும், அதனை உணரச் செய்தும் அதை கடைப்பிடிக்கக் கூடிய வழிமுறையை அருளியும் அருளிக் காப்பவன் முருகப்பெருமான் ஒருவனே என்பதை அறியலாம். அம்மை குண்டலி அருளிய முருகனே நம்மையும் காப்பான் என்றே போற்றுவோம். போற்றுவோம் முருகனின் பொன்னடி பெருமையை ஏற்றம் பெறுவோம் என்றும் இறவா நிலையே. அம்மை குண்டலி அருளிய முருகனே நம்மையும் … Read more

குரு உபதேசம் 4278

முருகப்பெருமானை பூஜித்து ஆசி பெற்றிட்டால் : ஞானத்திற்கு தலைவன் முருகப்பெருமான்தான் என்பதை அறிந்து உலக நடையில், உலக வாழ்க்கையில் இருந்து கொண்டே காலையில் பத்து நிமிடமும், மாலையில் பத்து நிமிடமும், முடிந்தால் இரவு பத்து நிமிடமும் “ஓம் முருகா” என்றோ, “ஓம் சரவண பவ” என்றோ, “ஓம் சரவண ஜோதியே நமோ நம” என்றோ நாமஜெபங்களை மந்திரஜெபமாக கூறி முருகப்பெருமான் திருவடிகளை உளமார உருகி பூஜித்திட வேண்டும். ஜீவதயவின் தலைவனான முருகனின் ஆசியை பெற வேண்டுமாயின், முதல் … Read more

குரு உபதேசம் 4277

முருகப்பெருமானை பூஜித்து ஆசி பெற்றிட்டால் : சைவ உணவை மேற்கொள்ளவும் சைவ உணவை கடைப்பிடிக்கவும், ஜீவதயவை மேற்கொள்ளவும், ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ளவும் முருகப்பெருமானே அருள் செய்வான் என்பதை அறியலாம். அந்தமில் இன்பம் அருளும் முருகனை செந்தமிழால் போற்றுவார் திடமே. பெருந்தகை முருகனை பேணியே தொழுதிட இருவினையில்லை இடருமில்லையே. முப்புரம் எரித்த முக்கண் மைந்தனை தப்பின்றி பூசிக்க தானவனாமே.