Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

குரு உபதேசம் 4272

முருகப்பெருமானை பூஜித்து ஆசி பெற்றிட்டால் : கைகள் பெற்ற பயனே பிறருக்கு கொடுப்பதுதான். அப்படி பிறருக்கு கொடுப்பதற்காகவே அளிக்கப்பட்ட கைகளை தர்மம் செய்ய பயன்படுத்தாவிட்டால் கைகள் இருந்தும் பயனில்லை என்பதை அறியலாம். பன்முகமாக பரவும் சிந்தையை சண்முகன் திருவடி சார்தல் நலமே. சிதறும் சிந்தையை திருவடி செலுத்திட பதரும் நெல்லாகும் பயனே! திக்கெல்லாம் போற்றும் திருவடி நமக்கே தக்க துணையென்றே சாற்றுவர் நல்லோர்.

குரு உபதேசம் 4271

முருகப்பெருமானை வணங்கி பூஜை செய்து ஆசி பெற்றிட்டால் : ஞானசித்தர் காலம் தொடங்கி விட்டபடியினாலே ஞானசித்தர் ஆட்சியிலே பங்கு பெறுகின்ற வாய்ப்பை பெற்று, தொண்டு செய்திட வேண்டுமாயின் முருகப்பெருமானின் ஆசி பெற்றால்தான் பங்கு பெற முடியுமென்றும், ஞானசித்தர் காலத்திலே முருகனது அருளைப் பெற்று தொண்டுகள் செய்து ஆசி பெற்று ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ள ஆசி பெற வேண்டுமாயின், உயிர்க்கொலை தவிர்த்து, புலால் மறுத்து, ஜீவதயவை மேற்கொண்டு சுத்த சைவ உணவை மேற்கொண்டு தினம் தினம் மறவாமல், “ஓம் … Read more

குரு உபதேசம் 4270

முருகப்பெருமானை வணங்கி பூஜை செய்து ஆசி பெற்றிட : முதன் முதலில் நரை, திரை, மூப்பு, பிணி மரணத்தை வென்ற முதல் தலைவன் ஞானபண்டிதன் முருகப்பெருமான்தான் என்பதை அறியலாம். முருகப்பெருமான் ஆசியைப் பெற்றால் நாமும் இவ்வித உன்னத நிலையைப் பெறலாம் என்பதையும் அறியலாம். முருகப்பெருமான் ஆசியைப் பெற விரும்புகின்றவர்கள் உயிர்க்கொலை தவிர்த்து, புலால் மறுத்து, சுத்த சைவ உணவை மேற்கொள்வதோடு தினம்தினம் முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி குறைந்தது காலை பத்து நிமிடமும், மாலை பத்து நிமிடமும் முடிந்தால் … Read more

குரு உபதேசம் 4269

முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட : வறுமையில்லா வாழ்வும், புலால் உண்ணாத வாழ்வும், நோயற்ற வாழ்வும், மதுவற்ற வாழ்வும் அமைந்து முருகன் அருள் கூடி குணக்கேடுகளெல்லாம் நீங்கி பண்புள்ள, பக்தியுள்ள வாழ்வு அமையும். பாலமுருகனின் பாதம் பணிந்திட காலனை வெல்ல காணுவான் உண்மை.

குரு உபதேசம் 4268

முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால் : பிற உயிர்கள் படுகின்ற துன்பத்தை உணரவும், அதை நீக்கவும், அதற்குரிய வாய்ப்பினைப் பெற்றும், ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ளலாம். பிற உயிர்கள் படுகின்ற துன்பங்களைக் கண்டு மனமிரங்கி, அவ்வுயிர் படுகின்ற துன்பத்தை உணர்ந்து, அவ்வுயிரின் துன்பத்திலிருந்து அவ்வுயிரை காப்பாற்றி அவ்வுயிர்களை மகிழ்வித்து வாழ வைப்பதே தவம் என்பதை அறியலாம். இப்படிப்பட்ட தவமே ஜீவதயவாகும். ஜீவதயவு பெருக பெருக மனிதனாய் பிறந்து மிருகமாய் வாழ்கின்றவன்கூட மிருகாதி தன்மையை இழந்து மனிதன் மனிதனாவான். … Read more

குரு உபதேசம் 4267

முருகப்பெருமானை பூஜித்து ஆசி பெற்றிட்டால் : மல, ஜல, சுக்கிலமாகிய ஆணவம், கன்மம், மாயை என்று சொல்லப்படுகின்ற மும்மலக்குற்றம் முருகனருளால் நீங்கப் பெற்று பெறுதற்கரிய ஒளி உடம்பை பெறலாம். தொடர் பிறவியை உண்டுபண்ணும் மும்மலக் குற்றத்தால் ஆன காமதேகத்தினின்று மும்மலக் குற்றத்தை நீக்கி பிறப்பு இறப்பு அற்ற ஒளிதேகத்தை முருகனருளால் பெற விரும்பினால் உயிர்க்கொலை தவிர்த்து, புலால் மறுத்து, சைவ உணவை மேற்கொண்டு தினம் தினம் காலை 10 நிமிடமும், மாலை 10 நிமிடமும் முடிந்தால் இரவு … Read more

குரு உபதேசம் 4266

முருகப்பெருமானை வணங்கி பூஜை செய்து ஆசி பெற்றிட்டால் : சிந்தையும் தூய்மையாகும், சொல்லும் தூய்மையாகும், செயலும் தூய்மையாகும், மற்றைய அனைத்தும் தூய்மையாகி முருகனது ஆசியைப் பெறலாம். தூய முருகனை தோத்திரம் செய்திட ஆய நல்வாழ்வு அருள்வான் முருகனே. முற்றும் உணர்ந்த முனிவர்கள் திருவடியே பற்றற்ற வாழ்வும் பரவாழ்வும் தரும்.

குரு உபதேசம் 4265

கொல்லா நெறியே குருவருள் நெறி அகத்தீசனை பூஜை செய்து ஆசி பெற்றிட்டால் : மனிதன் உணவு உண்பதற்கென்று இயற்கை எல்லையில்லாத வகையிலே அருளி நிற்கிறது. பல்வேறு வகையான தானியங்களும், காய்கறிகளும், கீரை வகைகளும், கனி வகைகளையும், இது தவிர காளான் உணவுகளும், கிழங்கு வகைகளையும், பால், தேன் போன்ற துணை உணவுகளும் என ஏராளமாய் இருக்கும் போது, ஒரு உயிரை துடிக்க துடிக்க கொடுமை செய்து கொன்று, அதன் உடம்பை சுவைக்காக உண்பது பெரும் பாவச்செயல் என்பது … Read more

குரு உபதேசம் 4264

முருகப்பெருமானை வணங்கி பூஜை செய்து ஆசி பெற்றிட்டால் : அறிவு என்ற ஒன்று இருக்குமானால் அது முருகப்பெருமானால் தான், தோன்றக் கூடும் என்பதையும், அந்த அறிவும் இகவாழ்வியல் அறிவு என்றும், பரவாழ்வியல் அறிவு என்றும், இரண்டு வகைப்படும் என்றும், அந்த இரண்டு வகையான அறிவையும் தோற்றுவித்தவன் முருகப்பெருமானே என்றும் அறியலாம். இக வாழ்வாகிய இல்லறத்திற்கும் பரவாழ்வாகிய ஞான வாழ்விற்கும் தலைவன் முருகனே என்பதையும் அறியலாம். ஆகவே ஜென்மத்தைக் கடைத்தேற்ற விரும்புகின்றவர்கள் படுக்கும் போதும், காலை எழும் போதும், … Read more